சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உட்பட்டு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 116 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் (Pudukkottai District Court)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலியிடங்கள்: 116
பணி : Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi மற்றும் Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
- விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 06.06.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 06.06.2021
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
- எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












