மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர்கிர்டு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு www.powergrid.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த சிறப்புவாய்ந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர்கிர்டு மின் பகிர்மானக் கழகத்தில் தான் தற்போது காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
தற்போது இங்கு Field Engineer(Electrical) பிரிவில் 11 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.30,000 - 1,20,000 வரை வழங்கப்படும்.
பவர்கிர்டு மின் பகிர்மானக் கழக பணியிடங்களுக்கான தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பவர்கிர்டு மின் பகிர்மானக் கழக பணியிடங்களுக்கான வயதுவரம்பு 29-க்குள் இருக்க வேண்டும்.
மேலும் Field Engineer(Civil) பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளன
சம்பளமாக மாதம் ரூ.30,000 - 1,20,000 வழங்கப்படும்.
பவர்கிர்டு மின் பகிர்மானக் கழக பணியிடங்களுக்கான தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பவர்கிர்டு மின் பகிர்மானக் கழக பணியிடங்களுக்கான வயதுவரம்பு 29-க்குள் இருக்க வேண்டும்.
இதேபோல் பீல்டு இன்ஜினியர் (ஐடி) பிரிவிலும் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு www.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 18.2.2024 ஆகும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு www.powergrid.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












