மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (PGCIL) காலியாக உள்ள Field Supervisor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.05 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid - PGCIL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Field Supervisor
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Operation மற்றும் Maintenance, Testing மற்றும் Commissioning, Electrical works in Sub Transmission பணிகளில் ஒரு வருட பனி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.23,000 முதல் அதிகபட்சம் ரூ.1,05,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.powergrid.in/sr-ii-recruitment என்ற இணையதளம் மூலம் 20.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300
- எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் தொழில்நுட்பத் திறன் மற்றும் Aptitude Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினை பெறவும் www.powergrid.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும். அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.