மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பஞ்சாப் நேஷனல் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 100
பணி : பாதுகாப்பு மேலாளர்
கல்வித் தகுதி:-
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :-
விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.48,170-1740/1-49910-1990/10-69810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 13.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50
- இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pnbindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.