மத்திய அரசின் பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பி.என்.பி) தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். கூடுதல் விவரங்களுக்கு pnbindia.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த மத்திய அரசின் பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் (பி.என்.பி) தற்போது அதிக அலவிலான பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது ஆபிஸ்ர் கிரடிட் 1000, மேனேஜர் - பாரக்ஸ் 15, மேனேஜர் - சைபர் செக்யூரிட்டி 5, சீனியர் மேனேஜர் சைபர் செக்யூரிட்டி 5 என மொத்தம் 1025 இடங்கள் காலியாக உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆபிசர் கிரடிட் பணிக்கு சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., / எம்.பி.ஏ., , மேனேஜர் - பாரக்ஸ் பணிக்கு எம்.பி.ஏ படிப்பும், மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு இணையத தள முகவரியான pnbindia.in -ஐத் தொடர்புகொள்ளலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 1.1.2024 அடிப்படையில் மேனேஜர் - பாரக்ஸ், சைபர் செக்யூரிட்டி பணிக்கு 25 - 35 ஆபிசர் கிரடிட் 21 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை
பஞ்சாப் நேஷனல் வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய முறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை
பஞ்சாப் நேஷனல் வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 1180 செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 59 விண்ணப்பக்கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
கடைசிநாள்: இந்தப் பணியிடங்களுக்கு வரும் 25.2.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு pnbindia.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












