சென்னையில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 1) கடைசி நாளாகும். 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சென்னை மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 18
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரப்பு :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பி.சி மற்றும் எம்பிசி விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- எஸ்.சி மற்றும் எஸ்சி விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/chennai என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் சென்னை 600 008
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 மார்ச் 01
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/chennai அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/OA Notification.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.