மத்திய அரசிற்கு உட்பட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணியில் காலியாக உள்ள மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட 225 பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : நேரு யுவகேந்திரா
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 225
பணி மற்றும் காலிப் பணியிட விவரம் :
- மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் - 100
- அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் - 73
வயது வரம்பு : 01.01.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப் - 52
வயது வரம்பு :
- 01.01.2019 தேதியின்படி 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வி மற்றும் இதர தகுதிகள் : ஏதேனும் ஓர் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், 12ம் வகுப்பு முடித்து தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.700. ஓபிசி பெண்கள் ரூ.350. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : http://nyks.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nyks.nic.in/recruitment/GuidelinesEnglish15032019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.