தமிழக அரசிற்கு உட்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2345 செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் இப்பணியிங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
நிர்வாகம் : தமிழ்நாடு சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : செவிலியர்
மொத்த காலிப் பணியிடம் : 2345
வயதுவரம்பு :
01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
57 வயதுவரை உள்ள எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் மனநலத் துறையில் 6 மாத பயிற்சி பெற்று மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.
பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் பணியியல் துறையில் 6 மாதகால பயிற்சி பெற்று செவிலியர் மற்றும் மகப்பேறு உதவி பணியில் பதிவு செய்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஊதியம் : ரூ.14,000 மாதம்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700
- எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 27
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜூன் 23
எழுத்துத் தேர்வு மையங்கள் : சென்னை, திருச்சி, கோவை, மதுரை,
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_Notification_07022019.pdf அல்லது www.mrb.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.