மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். அதன்படி, 2019 ஆம் ஆண்டுக்கான 127 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 127
துறைவாரியான காலிப் பணியிட விவரம்:-
- 1. எலக்ட்ரானிக்ஸ் - 52
- 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 75
வயது வரம்பு :
- 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு முறை : கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://ntrorectt.in என்னும் இணையதளத்ன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 04.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ntrorectt.in/ntro/home என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.