மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி)
மொத்த காலிப் பணியிடம் : 107
காலிப் பணியிட விபரம் :-
டிப்ளமோ பொறியாளர் பயிற்சி பிரிவு :
- எலக்ட்ரிகல் : 15
- மெக்கானிக்கல் : 28
- மெக்கானிக்கல் சி அண்டு ஐ : 10
- சிவில் : 2
ஐ.டி.ஐ பயிற்சி பிரிவு :
- பிட்டர் : 22
- எலக்ட்ரீசியன் : 12
- இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் : 8
- ஆய்வக உதவியாளர் : 6
- அஸிஸ்டென்ட் மெட்டீரியல் ஸ்டோர் கீப்பர் : 4
கல்வித் தகுதி :
- பொறியாளர் பயிற்சி பிரிவுகளுக்குத் தொடர்புடைய பிரிவுகளில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- ஐ.டி.ஐ பிரிவுகளுக்குத் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் வாயிலான எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 24
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் http://ntpccareers.net/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.