மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தாவர பயோடெக்னாலஜி பற்றிய தேசிய ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre on Plant Biotechnology) காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி அல்லது சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : National Research Centre on Plant Biotechnology
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : B.Sc அல்லது டிப்ளமோவில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் படித்தவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
- மேலும் அரசு விதிமுறையின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nrcpb.res.in/writereaddata/files/opportunities/RA%2C%20SRF%2C%20Lab%20Asstt%2C%20Sci.%20Admn.%20Asstt-converted%2011_0.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14.07.2020 என்ற தேதியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : Lecture Hall No.1 1st Floor, NIPB, LBS Building, Pusa Campus, New Delhi - 110012.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nrcpb.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.