திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) காலியாக உள்ள Project Assistant, Young Professional உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி (ICAR - NRCB)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Project Assistant - 01
- Young Professional - 03
- Senior Research Fellow - 01
மொத்த காலிப் பணியிடம் : 05
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பண்ணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- Project Assistant பணிக்கு 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Young Professional பணிக்கு 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Senior Research Fellow பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Project Assistant - ரூ.20,000 மாதம்
- Young Professional - ரூ.25,000 முதல் ரூ.35,000 மாதம்
- Senior Research Fellow - ரூ.31,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வண்டிய கடைசி தேதி : 17.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nrcb.icar.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.