மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஓய்வூதிய முறை அறக்கட்டளையில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.87 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : National Pension System Trust
பணி : துணை பொது மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று குறைந்தது 11 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.Rs.72800-2250(1)-75050-2400(2)-79850-2500(3)-87350-3000(5)-102350 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் npstrust.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 21.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Application Postal Address - Deputy General Manager (Human Resources) National Pension System Trust Third Floor, B-14/A, Chhatrapati Shivaji Bhavan, Qutab Institutional Area, New Delhi - 110016
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : முன்பதிவு செய்யப்படாத, EWS & OBC மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1000 (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் npstrust.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.