மத்திய அரசிற்கு உட்பட்டு தாராப்பூரில் செயல்பட்டு வரும் அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய அணுமின்நிலையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஸ்டைபண்டரி பயிற்சி (அறிவியல் உதவியாளர்)
காலிப் பணியிடங்கள் : 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம் :
- மெக்கானிக்கல் - 21,
- மின் - 06
- மின்னணுவியல் - 05
- வேதிப் பொருட்கள் - 10
- வேதியியல் - 07
உதவித் தொகை : முதல் ஆண்டு மாதம் ரூ.16,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : அறிவியல் உதவியாளர் (பி)
காலியிடங்கள் : 03
ஊதியம் : மாதம் ரூ.35,400
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.npcil.nic.in/Content/English/index.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.08.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.npcl.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.