திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 12 மாதங்கள் வழங்கப்படும் இந்த பயிற்சியில், பயிற்சிக் காலத்தின் போதே மாதம் ரூ.13 ஆயிரம் வரையிலும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கூடங்குளம் அணுமின் நிலையம்
மேலாண்மை : மத்திய அரசு
பயிற்சி : வர்த்தக பயிற்சி
காலி இடங்கள் : 57
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 16 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : ஐடிஐ துறையில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சிக் காலம் : 12 மாதம்
உதவித்தொகை : பயிற்சியின்போது மாதம் ரூ.12,000 முதல் ரூ.13,000 வரையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை முன்பதிவு செய்துவிட்டு அதன் பிறகு NPCIL இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 28
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.npcil.nic.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












