TNPSC Health Officer Recruitment 2022
தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் ஐந்து நாள் தான் இருக்கு என்பதை மறக்காதீங்க...!
நிர்வாகம் : தமிழ்நாடு பொது சுகாதார பணிகள்
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
Ø சுகாதார அலுவலர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12(முன் கொணரப்பட்ட 3 காலிப்பணியிடங்கள் உட்பட)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2022
கல்வி தகுதி
Ø சுகாதார அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதியை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
சுகாதார அலுவலர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 23 இன் படி, ரூ. 56,900 -ரூ. 2,09,200 வரை மாத ஊதியம் பெறுவர்.
நோட் இட் ப்ளீஸ்....!
Ø அறிவிப்பு நாள்: 21.10.2022
Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.11.2022
தேர்வு நாள், நேரம், பாடம்
தாள் -1
கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று
1. சமூக மருத்துவம்(Community Medicine,பட்டப்படிப்புத் தரம்)
13.02.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.
தாள் -2
பகுதி - அ
கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)
பகுதி -ஆ
பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
திறனாய்வு தேர்வு (10ம் வகுப்பு தரம்)
13.02.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 510 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.
தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர் கணினிவழி தேர்வின் அனைத்து தாள்களிலும் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு தாளில் கலந்து கொள்ளவில்லை எனில், அவர் கலந்து கொண்ட இதர தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
வயது வரம்பு
சுகாதார அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று 37 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
தேர்வு கட்டணம்
Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-
Ø தேர்வுக் கட்டணம் : ரூ.200/
மறக்காதீங்க...!
Ø இணையவழி விண்ணப்பத்தை 19.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/31_2022_HO_TAM.pdf