வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 1664 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு, ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : வட மத்திய இரயில்வே (North Central Railway)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Apprentice
மொத்த காலிப் பணியிடம் : 1664
கல்வித் தகுதி :
- 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும், பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட வட மத்திய இரயில்வேத் துறை அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.rrcpryj.org/Apprentice.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுகள் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rrcpryj.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.