மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 765
பணியிடம்: நெய்வேலி (தமிழ்நாடு)
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:
1. பிட்டர் - 120
2. டர்னர் - 45
3. மெக்கானிக் - 130
4. எலக்டிரிஷியன் - 100
5. வயர்மேன் - 120
6. மெக்கானிக் (டீசல்) - 25
7. மெக்கானிக் (டிராக்டர்) - 25
8. கார்பெண்டர் - 10
9. பிளம்பர் - 20
10. வெல்டர் - 70
11. பாஸா - 40
12. அக்கெளண்டன்ட் - 20
13. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 20
14. அஸிஸ்டென்ட் (எச்ஆர்) - 20
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ. 8,530- ரூ.9,748
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 16-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.07.2018
பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்படிவத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்எல்சி இந்தியா நிறுவனம்,
வட்டம் -20, நெய்வேலி - 607803.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 30.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள விளம்பர அறிக்கையை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.