திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ எலக்ட்ரிக்கல் பொறியியல் துறை பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NITT)
பணி : ஆராய்ச்சி உதவியாளர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : பி.இ.எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்
வயது வரம்பு : 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ. 20,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Principal Investigator, Dr. S. Moorthi, Associate Professor/ EEE in National Institute of Technology, Tiruchirappalli-15
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.07.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.