திருச்சி என்ஐடி-யில் (தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, மேற்பார்வை பொறியாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 04
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- மருத்துவ அதிகாரி - 01
- மேற்பார்வை பொறியாளர் - 01
- துணை பதிவாளர் - 02
கல்வித் தகுதி:-
மருத்துவ அதிகாரி - எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் / இளங்கலை அறுவை சிகிச்சை)
மேற்பார்வை பொறியாளர் - பி.இ. சிவில் பொறியியல்
துணை பதிவாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம்
ஊதியம் :-
மருத்துவ அதிகாரி - ரூ. 15,600 முதல் ரூ.39,100 வரையில், கூடுதலாக ரூ.5,400
மேற்பார்வை பொறியாளர் - ரூ. 37,400 முதல் ரூ.67,000 வரையில், கூடுதலாக ரூ.8,700
துணை பதிவாளர் - ரூ. 15,600 முதல் ரூ.39,100 வரையில், கூடுதலாக ரூ.7,600
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.nitt.edu மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.