திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29ம் தேதியன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 11
பணி மற்றும் பணியிட விபரம் :-
- மருத்துவ அதிகாரி : 02
- ஓய்வு விடுதி மேலாளர் : 01
- ஸ்டாப் நர்ஸ் : 08
கல்வித் தகுதி :-
- மருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் / இளங்கலை அறுவை சிகிச்சை )
- ஓய்வு விடுதி மேலாளர் : எம்பிஏ, பி.எஸ்சி, விடுதி மேலாண்மை
- ஸ்டாப் நர்ஸ் : பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்
ஊதியம் :-
- மருத்துவ அதிகாரி : ரூ. 55,000
- ஓய்வு விடுதி மேலாளர் : ரூ. 25,000
- ஸ்டாப் நர்ஸ் : ரூ. 20,000
வயது வரம்பு :-
- மருத்துவ அதிகாரி : 65 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- ஓய்வு விடுதி மேலாளர் : 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- ஸ்டாப் நர்ஸ் : 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.01.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Senate Room, Administrative Block, NIT Tiruchirappalli
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.nitt.edu அல்லது https://www.nitt.edu/home/other/jobs/TMO-2019.pdf, https://www.nitt.edu/home/other/jobs/GHM-2019.pdf, https://www.nitt.edu/home/other/jobs/Staff-Nurse-2019.pdf ஆகிய தொடர்புடையத் பணியிட அறிவிப்பு லிங்குகளை கிளிக் செய்யவும்.