திருச்சி என்ஐடி-யில் (தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) காலியாக உள்ள திட்ட உதவியாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி (NIT Trichy)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட உதவியாளர், திட்ட இணையாளர்
கல்வித் தகுதி : பி.இ சிவில் பொறியியல், பி.டெக், எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட துறையில் பயின்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் :
- திட்ட உதவியாளர் - ரூ.12,000
- திட்ட இணையாளர் - ரூ.25,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. K.Muthukkumaran, Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli - 620 015.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.02.2020 தேதி மாலை 4.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு லிங்க்கை காண இங்கே கிளிக் செய்யவும்.