மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆராய்ச்சி உதவியாளர்
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nimr.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 16.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் nimr.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.