மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.ஏ, பி.காம், பிசிஏ உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : நிர்வாக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : பி.ஏ, பி.காம், பிசிஏ, பிபிஏ உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 07.07.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nimhans.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.