மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட இணையாளர்
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி :-
- எம்.எஸ்.சி கணினி அறிவியல்,
- எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம்,
- பி.இ. கணினி அறிவியல் பொறியியல்,
- பி.டெக் தகவல் தொழில்நுட்பம்,
- எம்.எஸ்.சி புள்ளியியல்,
- பி.இ மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
ஊதியம் : ரூ. 25,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் nielit.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.03.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Institute of Electronics & Information Technology, ISTE Complex, 25, Gandhi Mandapam Rd, Chennai- 600025.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nielit.gov.in/chennai/chennai/sites/default/files/Chennai/applicationform-03-2019.pdf அல்லது nielit.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.