தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்தில் சேர விரும்புவோர் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7-வது ஊதிய வரைவின் படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் : தேசிய புலனாய்வு முகமை
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- ஆய்வாளர் - 25
- உதவி ஆய்வாளர் - 40
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கிரிமினல் வழக்குகள், புலனாய்வுப் பணிகள், தகவல் தொழில்நுட்ப வழக்குகள் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
(பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nia.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 18, 2019