மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள கூட்டு ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ரூ.75 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கூட்டு ஆலோசகர்
மொத்த காலிப்பணியிடம் : 10
கல்வித் தகுதி : விவசாயம், தோட்டக்கலை அறிவியல், வனத்துறை, சூழ்நிலை அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்து குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.75,000
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nhai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2020/2/19/nhai-apply-online-for-10-joint-advisor-plantation-posts-advt-details-7b22f9.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.