மத்திய அரசிற்கு உட்பட்டு ராஞ்சியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள தள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தள பொறியாளர்
காலிப் பணியிடங்கள் : 04
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : https://nhai.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் இட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : National Highways Authority of India. Project Inplementation Unit-Ranchi, C-168, Road No:4, Ashok Nagar, Ranchi - 834 002. Jharkhand.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.09.2019
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.