இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு சிவில் பொறியியல் படித்த கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணி : துணை மேலாளர் (தொழில்நுட்பம்)
மொத்த காலிப் பணியிடங்கள் : 30
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதோடு GATE-2019 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
தேர்வு முறை : விண்ணப்பதாரர் GATE-2019 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nhai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.10.2019ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் விண்ணப்பப் படிவத்தில் ஒப்பந்தக் கடிதத்துடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2225/1_Advertisment_DM_T_-30.09.2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.