மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.1.40 லட்சம் வரையிலும ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய உரத் தொழிற்சாலை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 44
பணி மற்றும் காலியிட விவரங்கள் :
பணி : மேலாண்மை பயிற்சி (HR)
காலிப் பணியிடங்கள் : 19
கல்வித் தகுதி : Personnel Management, Industrial Relations, Human Resource Management, HR போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : மேலாண்மை பயிற்சி (Marketing)
காலிப் பணியிடங்கள் : 25
ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
வயது வரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.
கல்வித் தகுதி : விவசாயத்துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்து சந்தையியல், விவசாய சந்தையியல், உலக சந்தையியல், கிராமப்புற மேலாண்மை பாடப்பிரிவில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.700.
(எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் தேசிய உரத் தொழிற்சாலையின் அதிகார்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.