ஒரு திட்டத்தில், ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் பொது துறை நிறுவனம் தான், 'நவ ரத்னா' வகை. அந்த அந்தஸ்து, நம்ம தமிழ்நாட்டில்
இருக்கும் ஒரு நிறுவனம் கொண்டுள்ளது.
அது தான் என்.எல்.சி., என்றழைக்கப்படும் 'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்'. அந்த நிறுவனத்தில், வெல்டர் (Welder), எலெக்ட்ரீசியன் (Electrician)
உள்பட பல பணிகளில் உள்ள 85 காலிப் பணியிடங்களுக்கு ஆர்வம் மற்றும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : 'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்'(NLC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி விவரம்
§ Fitter.
§ Electrician.
§ Welder.
§ Medical Lab Technician Pathology.
§ Medical Lab Technician Radiology.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன், ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.07.2022
பணியிடங்கள்: 85
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்ச
வயது 14 ஆகும். வயது வரம்பில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
ஊதியம்
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.8,766/- முதல் ரூ.10,019/- வரை ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள், தகுதி (Merit) அடிப்படையிலும், நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.
விண்ணப்பங்களை 29.07.2022 ம் தேதிக்குள் கட்டாயம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பணியிடங்கள் தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மறந்துடாதீங்க...!
இங்கு நிரந்தர வேலைக்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது என்பதை தெரிஞ்சுகோங்க..
ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!
என்.எல்.சி., தளத்துக்கு செல்ல...!
https://www.nlcindia.in/new_website/index.htm
https://drive.google.com/file/d/17tqUH5G8RZBrczCmkH9VkFyKvH8OOmCk/view