மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் காகித ஆலை நிறுவனத்தில் (NEPA Limited) காலியாக உள்ள சிவில் பொறியாளர், DCS/ QCS Operator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய காகித ஆலை நிறுவனம் (NEPA Limited)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 48
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Civil Engineer - 03
- DCS/ QCS Operator - 06
- Paper Machine Operator - 15
- ITI -Fitter - 06
- ITI - Electrician - 10
- ITI - Instrument - 08
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- ITI -Fitter/ ITI - Electrician / ITI - Instrument பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
- Civil Engineer, DCS, QCS Operator - 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Paper Machine Operator - 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :-
- Civil Engineer, DCS, QCS Operator, Paper Machine Operator பணிக்கு ரூ.20,000
- ITI - Fitter, ITI - Electrician, ITI - Instrument பணிக்கு ரூ.12,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nepamills.co.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, உடற் தகுதித் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nepamills.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












