மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த இணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.42 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த இணைப்பாளர்
கல்வித் தகுதி : M.Sc Biotechnology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.42,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை csirneericzc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்..
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினைப் பெறவும் https://www.neeri.res.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.