மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 75
கல்வித் தகுதி :
B.Sc Biochemistry
B.Sc Chemistry
B.Sc Microbiology
B.Sc Physics
வயது வரம்பு : மேற்கண்ட திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.neeri.res.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 12.03.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Water Testing Laboratory, Uttar Pradesh Jal Nigam, 6, Rana Pratap Marg, Hazratganj, Lucknow, Uttar Pradesh 226001.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.neeri.res.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.