மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள ஆலோசகர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு வருடத்திற்கு ரூ.32 லட்சம் என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Advisor and Manager on Security, Expert/General Feeder Bus System
மொத்த காலிப் பணியிடம் : 04
கல்வித் தகுதி :
Advisor (Security), Manager (Security) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Expert Feeder Bus System - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : வருடத்திற்கு ரூ.32 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.