மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள Multi- Modal Expert பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Multi- Modal Expert
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
- சிவில் அல்லது அதற்கு இணையான துறையில் பி.இஇ, பி.டெக் அல்லது Transport Planning துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மத்திய, மாநில அரசிற்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ஆண்டிற்கு ரூ.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பித்து, அதற்கான நகலினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையிர் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Career Cell,
HR Department,
National Capital Region Transport Corporation,
7/6 Siri Fort Institutional Area,
August Kranti Marg,
New Delhi-110049.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.