மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த திட்ட மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : General Manager/ Dy.Chief Project Manager/ Addl. General Manager
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சிவில் பாடப்பிரிவுகளில் B.E, B.Tech, M.Tech போன்றவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 12 முதல் 16 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.90,000 முதல் அதிகபட்சமாக ரூ.2,40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் 01.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.