மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் NCRTC எனும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள இணை மூத்த பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : (NCRTC) தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Dy. Chief Engineer
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்று குறைந்தது 8 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 05.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.