தேசிய சட்ட நிறுவன தீப்பாயத்தில் (NCLT) காலியாக உள்ள உதவி பதிவாளர் மற்றும் இணைப் பதிவாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : National Company Law Tribunal (NCLT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி பதிவாளர் மற்றும் இணைப் பதிவாளர்
மொத்த காலிப்பணியிடம் : 12
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள், நீதிமன்றங்கள், பழங்குடியின நல வாழ்வு நிறுவனங்களில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.2,09,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nclt.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 30.06.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nclt.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.