மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரெளலியில் நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 2482 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிறுவனம் : நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 2482
பயிற்சி : தொழில் பழகுநர் பயிற்சி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:-
- வெல்டர் - 162
- எலக்ட்ரீசியன் - 1260
- பிட்டர் - 840
- மோட்டார் மெக்கானிக் - 220
வயது வரம்பு : 30.09.2018 தேதியின்படி 16 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்தியப் பிரதேசம் அல்லது உத்தரப்பிரதேசம் மாநில என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதியான பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனடிப்பையில் பயிற்சி இடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.07.2019
இப்பயிற்சி குறித்தான மேலும் விபரங்களை அறிய http://www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.