இந்திய ஜவுளிகழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . நேஷனல் டெக்ஸடைல் கார்பரேஷன் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் .
தேசிய ஜவுளி கழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் 40 ஆகும் . 40 கிளார்க் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளோரிடமிருந்து 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய ஜவுளி கழகத்தில் பணியிடங்கள் கிளாரிக்கல் 26 பணியிடங்களும் அத்துடன் செக்கியூரிட்டி சூப்பிரவைசர் பணியிடங்கள் 14 எண்ணிக்கைகள் நிரப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
நேசனல் டெக்ஸ்டைல் கார்பரேஷன் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற கிளாரிக்கல் பணிக்கு கல்விதகுதியாக கணினி சமபந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். சூப்பிரவைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எதாவதொருதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்டதுறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு வயது வரம்பானது 30-10-2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறையானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேசிய ஜவுளிகழகத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கும் முறையானது அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அவற்றை தேவையான தகவலுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை இணைத்து கீழே குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ தளத்தை இங்கு இணைத்துள்ளோம்.
விண்ணப்பங்கள் முகவரி :
நேஷன்ல் டெக்ஸ்டைல் கார்பரேஷன் ஆஃபிஸ்,
வெஸ்ட்ன் ரிஜியன் ஆஃபிஸ்
15 என் எம் மார்க் பேல்லேடு எஸ்டேடு
400001
இந்திய ஜவுளிகழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 30 ஆகும்.
சார்ந்த பதிவுகள்:
விழுப்புரத்தில் அக்டோபர் 28ல் வேலை வாய்ப்பு முகாம் !!