மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் லிமிடெட்டில் (Tantea) காலியாக உள்ள எலக்ட்ரீசியன், டர்னர், பிட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் லிமிடெட் (Tantea)
மேலாண்மை : தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)
பணி : Electrician, Turner, Fitter பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 23
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.7,000 முதல் ரூ.9,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Electrician
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Turner
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Fitter
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.apprenticeshipindia.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.