மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட சுமார் 120 பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 120
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
மெக்கானிக்கல் - 45, எலெக்டரிக்கல் - 29, இன்ஸ்ட்ருமென்டேசன் - 15, மெட்லர்ஜரி - 13, சிவில் - 5, மைனிங் - 4
இப்பணியிடங்கள் இட ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி, UR - 51, OBC - 31, SC - 15 ST -11, EWS - 12. அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கல்வித் தகுதி:
மேற்கண்ட பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கேட் தேர்வு 2020 ல் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20 மார்ச் 2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nalcoindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.