தமிழக அரசிற்கு உட்பட்ட நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Village Assistant
மொத்த காலிப் பணியிடங்கள் : 19
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.11,100 முதல் அதிகபட்சம் ரூ.35,100 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Regional Head, Kilvelur Taluk Office, Nagapattinam-611104.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.09.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.