நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறை
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
• தட்டச்சர்(Typist)
• சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III (Steno-typist Grade-III)
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.09.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 22
தட்டச்சர்(Typist)
சம்பளம்: ரூ. 19500 - ரூ.62000
கல்வித்தகுதி
குறைந்தபட்ச பொது கல்வி தகுதி அதாவது எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு தகுதி அரசு தொழில்நுட்பத் தேர்வில் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஜுனியர், சீனியர் கிரேடு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III (Steno-typist Grade-III)
சம்பளம்: ரூ. 20600 - ரூ.65500
கல்வித்தகுதி
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும், அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பணி அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் 01/07/2022 தேதியின்படி குறைந்த பட்சமாக, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் இல்லை.
விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதை ஞாபகம் வச்சுக்கோங்க...!
விண்ணப்பிக்கும் முறை
• விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விபரங்களுடனும், அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச்சன்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும், கலப்புத் திருமணம் மற்றும் பிற) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (உரிய சான்றுடன்) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் "முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்" என்ற முகவரிக்கு, 09-09-2022ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
• காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
• விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் முன் விண்ணப்பதார்களுக்கான அறிவுரையை கவனமாக படித்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
•மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர் காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது.
வயது வரம்பு
வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி
செயல்படுத்தப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய கீழே சொடுக்கவும்...!
https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment 2022.pdf