மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஊக்க மருந்து தடுப்பு அதிகாரி
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ. 30,000/-
வயது வரம்பு: 25-45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: லைப் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பிஸியோதெரபி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
தேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Director General National Anti Doping Agency,
A-Block, Pragati Vihar Hostel,
Lodhi Road, New
Delhi-110003
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி தேதி: 18.06.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.