விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான நிதி வழங்கும் வங்கியான, 'நபார்டு' என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், 150 உதவி மேலாளர் காலிப் பணியிடங்களுக்கு, டிகிரியை கம்ப்ளீட் பண்ணி இருந்தீங்கனா...! யோசிக்காதீங்க உடனே விண்ணப்பிங்க...! சும்மா இல்லை தேர்வான மாத ஊதியம் சலுகைகளுடன் சேர்த்து ஒரு லட்சம் பெறுவர் என்பதில் ஐயமில்லை.
நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD).
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
· Assistant Manager in Grade 'A' (Rural Development Banking Service) - 150
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.09.2023
பணியிடங்கள்: 150
கல்வி தகுதி
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் சலுகைகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் ரூ.44,500 முதல் ரூ.1,00,000 வரை பெறுவர்.
தேர்வு முறை:
'Assistant Manager in Grade 'A' பணிக்கு, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில், ஆன்லைன்
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
23.09.2023ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். நினைவில் கொள்ளுங்கள், கடைசி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.800 மற்றும் பட்டியலினத்தவர்கள் ரூ.150 செலுத்த வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 ஆகவும், அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
பணியிடங்கள் தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












