மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியாக உள்ள ஆலோசகர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய புள்ளியியல் துறை (MOSPI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 48
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
Senior Consultant - 03
ஊதியம் : மாதம் ரூ.1,00,000
Junior Consultant - 25
ஊதியம் : மாதம் ரூ.70,000
Executive Assistant - 20
ஊதியம் : மாதம் ரூ.35,000
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mospi.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Deputy Director General (Admn), Maharishi Valmikimarg, New Delhi - 110032
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 29.02.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mospi.gov.in/whatsnew என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.