மத்திய அரசிற்கு உட்பட்ட தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் (SFIO) காலியாக உள்ள இணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 75
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:
- Assistant Director - 31
- Additional/ Joint Director - 3
- Deputy Director - 21
- Office Superintendent - 1
- Senior Assistant Director - 16
- Senior Prosecutor - 3
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Assistant Director, Additional Director - ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900
- Joint Director - ரூ.78,800 முதல் ரூ.2,09,200
- Deputy Director - ரூ.67,700 முதல் ரூ.2,08,700
- Office Superintendent - ரூ.44,900 முதல் ரூ.1,42,400
- Senior Assistant Director, Senior Prosecutor - ரூ.56,100 முதல் ரூ.1,77,500
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sfio.nic.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.03.2022 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sfio.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.