சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள உதவியாளர் (பதிவாளர்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்
பணி : உதவியாளர் (பதிவாளர்)
மொத்த காலிப் பணியிடங்கள் : 08
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 03.02.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000
- இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mhc.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.